பட்ஜெட்டை எதிர்த்து அதிமுக போராட்டம்
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட்டாக உள்ளதால், அதை எதிர்த்து அதிமுக மார்ச் 9 ம் தேதி தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும்போராட்டம் நடத்தும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட்டாக உள்ளது.மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் மார்ச் 9 ம் தேதி போராட்டம் நடத்தத் முடிவு செய்துள்ளோம்என்று கூறப்பட்டுள்ளது.
இடது சாரி கட்சிகள் போராட்டம்:
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 7 ம் தேதிபோராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் நல்லகண்ணு, பார்வர்டு பிளாக் மாநிலபொதுச்செயலாளர் சந்தானம் ஆகியோர், இந்த பட்ஜெட்டால் நடுத்தர மக்களும், ஏழைகளும் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.