For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக காங்கிரசில் தேர்தல் சண்டை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பதால் அதில் சேர முடியாது என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறிவருவதற்கு காங்கிரசிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பா.ம.க. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சி என்பதால் அதக் கட்சி இடம் பெற்றுள்ள கூட்டணியில் சேரகாங்கிரசில் தயக்கம் உள்ளது. ஆனால், காங்கிரசின் தயக்கத்துக்கு அக் கட்சியின் எம்.பியான சுதர்சனம்நாச்சியப்பனே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவர் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை அவரது சிவகங்கை தொகுதியிலேயேதோற்கடித்து எம்.பியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், அக்கூட்டணி வலுவடைந்துள்ளது. பா.ம. கஇருப்பதால் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் சேருவதில் பிரச்சினையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர பா.ம.கதான் தடையாக இருப்பதாக வியாழக்கிழமைதான் காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இளங்கோவன் கருத்தை மறுத்து காங்கிரஸ் எம்.பி.சுதர்சன நாச்சியப்பன் பேட்டியளித்துள்ளார்.

மூப்பனாரை வெள்ளிக்கிழமை சுதர்சன நாச்சியப்பன் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், பா.ம.க.இருப்பதால் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் சேர முடியாது என்று இளங்கோவன்கூறியுள்ளார். அது தவறு. பா.ம.க இருப்பதால் காங்கிரஸ் சேர முடியாது என்று கூற முடியாது.

பா.ம.க. தவறான கட்சியல்ல. திமுக வை விட விடுதலைப்புலிகளுக்கு பெரிதாக பா.ம.க எ தையும் செய்து விடவில்லை. எனவே அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சேருவதில் தவறில்லை.

மூப்பனார்தான் எங்களுக்குத் த லைவர். அவர் எடுக்கும் முடிவு சரியானதாகவே இருக்கும். அவரே விரைவில்கூட்டணி குறித்து முடிவு அறிவிப்பார் என்றார் நாச்சியப்பன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X