For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாறனுடன் மேலும் 4 பேர் கைது: ஜெ.குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனின் கூட்டாளியும், தமிழர் தேசிய விடுதலைப் படை தலைவருமான மாறன் கைது செய்யப்பட்ட போதுஅவருடன் சேர்த்து, அவரது கூட்டாளிகள் 4 பேரையும் அதிரடிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர் என்றுஅ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சத்யமங்கலம் காட்டிற்கு அருகே வீரப்பனின் கூட்டாளி மாறன் கைது செய்யப்பட்ட போது அவருடன் சேர்த்துமேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீரப்பனின் கூட்டாளிகள். ஆனால் மாறன் கைதுகுறித்து முதல்வர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கூறி வருகிறார்.

மாறனுடன் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேரும் தமிழகத்தில் வேறு வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட மாறன், தான் சிதம்பரத்தில் வைத்து பிப்ரவரி 12 ம் தேதி க்யூ பிராஞ்ச்போலீஸாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் போலீஸாரோ மாறன் 15 ம் தேதி கைதுசெய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். கருணாநிதிதான் இந்த குளறுபடிகளுக்கெல்லாம் காரணம்.

மேலும் கேரள மாநிலம் வாளையாறு பகுதியில் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் இல்லை என்று கேரள மாநிலஅரசே கூறியுள்ளது.

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X