திரிபுராவில் 12 போலீசார் சுட்டுக்கொலை
அகர்தலா:
திரிபுராவில் பிர்காஞ்ச் அருகே போலீசாருக்கும், தடை செய்யப்பட்ட திரிபுரா தேசிய விடுதலை முன்னணி தீவிரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை காலை8.30 நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மத்தியப் புறக் காவல்படை போலீசார் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வழக்கம் போல் மத்தியப் புறக்காவல் படை போலீசார் பிர்காஞ்ச் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்ததீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
இதில் மத்தியப் புறக்காவல் படை போலீசார் 10 பேர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் அந்தத் தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுக்குள் ஓடி தப்பித்து விட்டனர். காலை 8.30 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.
இதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய புறக்காவல் படை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.