சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு 23 ஆண்டு சிறை
திண்டுக்கல்:
ஏழு வயதுச் சிறுமையை கற்பழித்துக் கொன்றவருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் ஆசநாத்புரத்தைச் சேர்ந்த அசன் ராவுத்தர். அவரது மகன் கணவாய்பிச்சை(22).
இதே பகுதியில் வசித்து வருபவர் முகமது. இவரது மகள் ஹஜீரா (7).
கடந்த 95ம் ஆண்டு மேமாதம், ஒன்றாம் தேதி முகமது வீட்டில் சிறுமி ஹஜீரா மட்டும்தனியாக இருந்துள்ளார். இந்த சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி கணவாய்பிச்சை அழைத்துள்ளார். சிறுமியும் அவருடன் சென்றுள்ளார்.
பின்னர் ஓரிடத்தில் வைத்து சிறுமியைக் கற்பழித்துள்ளார் கணவாய் பிச்சை. இதனால்அலறிய சிறுமியின் வாயில் துணியை வைத்து கொலை செய்துள்ளார். இந்தக் கொலைதொடர்பாக திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர்.
பின்னர் போலீசார் பிச்சையை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கந்தசாமி, சிறுமியைக் கற்பழித்தகணவாய்பிச்சைக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.