புதிய நீதிக்கட்சி தி.மு.க. கூட்டணியில் இணையாது
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் எக்காரணம் கொண்டும் இணைய மாட்டோம் எ புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறினார்.
காங்கிரஸ் கமிட்டி அலுலவலகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவனைசந்தித்த சண்முகம் மூன்றாவது அணியில் காங்கிரஸ் இணையுமாறு கேட்டுக் கொண்டார்.அதன் பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணைய விரும்பி தி.மு.கவை தொடர்பு கொண்டதாககூறுவது தவறு. புதிய நீதிக் கட்சி தற்போது எங்களால் துவங்கப்பட்ட மூன்றாவதுஅணியான தமிழ்நாடு ஜனநாயக முன்னணியில் இருக்கிறது.
காங்கிரசும், த.மா.கா.வும் எங்கள் மூன்றாவது அணியில் இணையாவிட்டாலும் கூடநாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டோம்.
மூப்பனாரை சந்தித்து மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குமாறு அழைத்துள்ளேன். அவர்மூன்றாவது அணிக்கு வந்தால் அவரை முதலமைச்சராக முன் நிறுத்தி தேரத்தலில்போட்டியிடுவோம்.
சோனியா காந்தியை சந்தித்து பேசுவதற்காக டெல்லி செல்லவிருக்கிறேன். அவர்அனுமதிக்காக காத்திருக்கிறேன். அவர் நேரம் ஒதுக்கும்போது அவரை சந்தித்து காங்கிரசைமூன்றாவது அணியில் சேருமாறு கேட்டுக் கொள்வேன் என்றார்.
சண்முகத்துடனான சந்திப்பு குறித்து இளங்கோவன் கூறுகையில், சண்முகத்துடன் நடந்தபேச்சு வார்த்தை குறித்து சோனியா காந்தியிடம் தெரிவிப்பேன் எனறார்.
யு.என்.ஐ.