கூட்டணி தர்மத்தை மீறிய இடதுசாரி
சென்னை:
அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் திருப்தி அடையாது. கோபம் கொண்டு அந்த விவரங்களை வெளியிட்டதன் மூலம் இடதுசாரி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறிவிட்டன என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுக்கும், இடது சாரி கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையின் முடிவில்தங்களுக்கு அளிக்கப்பட்ட தொகுதிகள் குறித்து இடது சாரியினர் அதிருப்தி அடைந்தனர். இந்த விஷயங்களை பத்திரிக்கையாளர்களிடமும் கூறினர்.
இது பற்றி நிருபர்களிடம் ஜெயலலிதா கூறுகையில். தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை குறித்து விவரங்களை வெளியிட்டதன் மூலம் இடது சாரியினர்கூட்டணி தர்மத்தை மீறி விட்டனர்.
அவர்கள் எது பற்றி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் பேச்சு வார்த்தை நடத்தலாம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
அவர்கள் எனக்கு எழுதிய கடிதம் தனிப்பட்டது. அது இரு கட்சிகளுக்கு இடைப்பட்ட சொந்த விஷயம். அது குறித்து நான் பத்திரிக்கையாளர்களிடம்விவாதிக்க முடியாது. அந்த கடிதத்தின் விவரம் குறித்தும் கூற முடியாது.
த.மா.கா.வுக்கும், காங்கிரசுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என அறிவித்ததற்கு காரணம் பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருந்த பலமாறுபட்ட கருத்துக்களை களைந்து உண்மை நிலையை விளக்கத்தான் என்றார்.
யு.என்.ஐ.