உயிரைப் பறித்த துப்பாக்கி விளையாட்டு

Subscribe to Oneindia Tamil

சான்ட்டி (கலிபோர்னியா):

கலிபோர்னியாவில் உள்ள சான்ட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15 வயது மாணவர் சிரித்த முகத்துடன் தனது நண்பர்களைநோக்கி விளையாட்டாகத் துப்பாக்கியால் சுட்டார்.

இந்த மாணவரின் துப்பாக்கி விளையாட்டில் இரண்டு மாணவர்களின் உயர் பறிக்கப்பட்டது. 13 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளில் துப்பாக்கி வைத்திருப்பது ஹீரோத்தனமான பேஷனாக மாறி வருவதுதான் வேதனைக்குரியது. ஏப்ரல்மாதம் 1999 ம் ஆண்டு கொலராடோவில் உள்ள கொலம்பைன் உயர்நிலைப்பள்ளியில் உல்ள இரண்டு டீன் ஏஜ் மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது 15 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சான்ட்டி மேயர் ரான்ட்டே வோபெல் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் சான்ட்டியில் 9 வாரங்களாக மேயராக இருந்து வருகிறேன். ஆனால் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடத்தும் மாணவர்களைக் கண்டிக்க வேண்டும்.முதலில் மாணவர்கள் துப்பாக்கி உபயோகப்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். நாங்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத்திட்டமிட்டுள்ளோம்.

சான் டைகோவில் உள்ள சான்ட்டியில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு போல் அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள்நடக்கலாம். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த சில வருடங்களாக அர்கென்சாஸ், ஒரேகான், கென்டக்கி மற்றும் கொலராடோவில் தொடர்ந்து இதுபோன்ற துப்பாக்கியால் சக மாணவர்களைச்சுடும் மாணவர்கள் பெருகி வருகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+