For Daily Alerts
Just In
45 இடங்கள் போதாது என்கிறது காங்கிரஸ்
டெல்லி:
த.மா.காவுக்கும் ,காங்கிரசுக்கும் கூட்டாக 45 தொகுதிகளை ஜெயலலிதாஒதுக்கியிருப்பது போதாது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயபால் ரெட்டிகூறுகையில், இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி மிக குறைவானது.த.மா.கா. தங்கள் சார்பாகவும் எங்கள் சார்பாகவும் அ.தி.மு.க.விடம் பேசிவருகிறார்கள்.
எத்தனை தொகுதிகள் தேவை என கூறி பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நாங்கள்விரும்பவில்லை.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் கூட்டணிநிலவுமா இல்லையா என கூற முடியாது. பாண்டிசேரியை பொறுத்த வரையில் எங்கள்நிலையில் எந்த மாற்றமும் கிடையாது. பா.ம.க. குறித்த கருத்திலும் எந்த மாற்றமும்கிடையாது.
தி.மு.க.தலைமையிலான தே.ஜ. அணியை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம் என்றார்.
Comments
Story first published: Wednesday, March 7, 2001, 5:30 [IST]