For Daily Alerts
Just In
தொகுதிப்பங்கீடு: திமுக, மதிமுக இன்று ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து மதிமுக, திமுக கட்சிகள் புதன்கிழமை கூடி ஆலோசனைநடத்துகின்றன.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகே நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும்.
தொகுதிப்பங்கீடு குறித்து புதன்கிழமை மதிமுக வும், திமுக வும் கூடி விவாதிக்கத் தீர்மானித்துள்ளோம்.
சேது சமுத்திரத் திட்டத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை அவர் நிறைவேற்ற வேண்டும்என்றார் வைகோ.
Comments
Story first published: Wednesday, March 7, 2001, 5:30 [IST]