பாகிஸ்தான் ஜனாதிபதி ஆவாரா முஷாரப்?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக தன்னை முஷாரப் பிரகடனப்படுத்திக் கொள்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரைடே டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி:
இந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்பின் ஆட்சிக்காலம் முடிவடைவதால் அவர் அடுத்த ஜனாதிபதியாகதன்னையே அறிவித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடப்பதையடுத்து, சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம், பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு வெளிவந்து 15 மாதங்களாகி விட்டன.
இந்த நேரத்தில் முஷாரப் பாகிஸ்தானின் அடுத்த அதிபராக ஆகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. ஏனெனில் பல வழக்குகளி சம்பந்தப்பட்ட பாகிஸ்தான்முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இனிமேல் அரசியல் எதிர்காலம் இல்லை எனக் கூறலாம்.
மேலும் பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் ரபிக் டராரின் பதவிக்காலம் 2002 டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அவர் 1998 ம் ஆண்டுபாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனால் முஷாரப் பாகிஸ்தானின் அடுத்த அதிபராகப் பதவியேற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு பிரைடே டைம்ஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
யு.என்.ஐ.