புதுவை அருகே 5 முகம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில்
சென்னை:
ஆஞ்சநேயரின் 5 அவதாரங்களை குறிக்கும் வகையில் 5 முகம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில் ஒன்று பாண்டிச்சேரிக்கு அருகே அமைக்கப்பட உள்ளது.
இந்த கோவில் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவ சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ளது. 5 முகம் கொண்ட அஞ்சநேயர் கோவில் இந்தியாவில் வேறு எங்கும்கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் புராண முக்கியத்துவம் காரணமாக பாப்பன்சாவடி என்ற இடத்தில் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து சங்க நிறுவனரும், புரோகிதருமான ரமணி அன்னா நிருபர்களிடம் கூறுகையில், இந்த இடத்தில் கோவில் அமைப்பத்கு முக்கியமான காரணம்இந்த இடத்தில் பலரும் தாங்கள் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்து சித்தி அடைந்துள்ளனர். அனுமானே தனக்கு இங்கு கோவில் கட்டப்படவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
1999-ம் ஆண்டு சேவா சங்கத்தின் இன்னொரு உறுப்பினரின் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சென்று கொண்டிருந்த போது ஆஞ்சநேயர் கோவிலை கட்ட வேண்டும் எனதெய்வமே கட்டளை இட்டது.
ஆஞ்சநேயரின் 5 அவதாரங்களை குறிக்கும் 5 முகம் கொண்ட ஆஞ்சநேயரின் 36 அடி உயர சிலை அடுத்த ஆண்டு ஏப்பரல் மாதம் நிர்மாணிக்கப்படும்.
இந்த கோவில் திண்டிவனம் - பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டும் பணி 2003-ம் ஆண்டு முடிவடைந்துவிடும்.
இந்த கோவிலுடன் ஆனந்த கேந்திரம் என்ற பள்ளியும், வேத பாட சாலை ஒன்றும் நிறுவப்பட உள்ளது என்றார்.
யு.என்.ஐ.