பனியன் நிறுவனத்தில் மோசடி
திருப்பூர்:
நிறுவனத்தின் "செக்கை தவறாகப் பயன்படுத்தி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பூர் தில்லை நகரில் நர்மதா டெக்ஸ்டைல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளாக சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் (50), ரவிச்சந்திரன்( 30), ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.
எனவே, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியின் வரவு செலவு கணக்கு உட்பட, நிர்வாகம் முழுவதையும் கோவிந்தசாமி (45) என்பவர் கவனித்துவந்தார்.
இவரது மனைவி சாவித்திரி திருப்பூர் நகராட்சியின் கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறார். இவர்கள் திருப்பூரில் உள்ள முருகம்பாளையத்தில் குடியிருந்துவருகின்றனர்.
இதற்காக நிர்வாக இயக்குநர்கள் இருவரும் ஒரு செக் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர். ஏற்றுமதிச் செலவு மற்றும் நூல் வாங்கவும்இந்த செக் புத்தகத்தை கோவிந்த சாமி பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்திருந்தனர்.
ஆனால் கோவிந்தசாமி இதனைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு உடந்தையாக அக்கவுண்டன்ட் ராஜேஷ் (28), கணேஷ் மோகன் ஆகியோரும் செயல்பட்டுள்ளனர். இது குறித்து நிர்வாக இயக்குநர்கள் அளித்தபுகாரின் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications