கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம்
கோவை:
கூட்டுறவுத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என் நேருதெரிவித்தார்.
பொள்ளாச்சிக் கூட்டுறவுச் சங்கங்களின் பவள விழா மற்றும் மருத்துவ முகாம் துவக்க விழா நடந்தது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்நேரு கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் ரூ. 15 ஆயிரம் கோடிக்கும் மேல் டெபாசிட்டாகபெற்றுள்ளது.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெபாசிட் சேகரிப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் உள்ள 128 கூட்டுறவு சங்கங்களில் 6சங்கங்களைத் தவிர மற்றவை லாபத்தில் இயங்குகின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் நேரு.விழாவில் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.