மே மாதம் ஊட்டியில் மலர்க் கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

ஊட்டி மலர்க் கண்காட்சி மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. குன்னூர் பழக்கண்காட்சி மே 27ம் தேதி நடக்கிறது.

தோட்டக்கலைத் துறை சார்பில் நடந்து வரும் ஊட்டி மலர்க் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடந்து வருகிறது.

கடந்த 105 ஆண்டுகளாக நடந்த இந்தக் கண்காட்சி கடந்த ஆண்டு தேயிலை விவசாயிகள் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதத்தில் மலர்க் கண்காட்சியை நடத்த தோட்டக் கலைத் துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணைத் தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, ஊட்டி மலர்க் கண்காட்சி வரும் மே 19, 20 தேதிகளில்நடத்த தீர்மானித்துள்ளோம் என அறிவித்தார்.

மேலும் குன்னூர் சிம்ஸன் பார்க்கில் மே 27ம் தேதி பழக் கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலர்க் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு இரண்டு ரூபாய், சிறியவர்களுக்கு ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+