2 கம்யூ. கட்சிகளும் செயற்குழுவைக் கூட்டுகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இன்னும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை.செவ்வாய்க்கிழமை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது செயற்குழுக் கூட்டங்களைக் கூட்டியுள்ளனர். அதன் முடிவில், மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

அதிமுக கூட்டணியில், இதுவரை பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன்மட்டுமே தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை.இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்கும் தொகுதிகளை கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை என்பதால்,பேச்சுவார்த்தையில் ஒரு முடிவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் ஓ.எஸ்.மணியன் மற்றும் தம்பித்துரை ஆகியோர் அடங்கிய குழு, இருகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். ஆயினும் இழுபறியே நீடித்தது.

இந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் மீண்டும் போயஸ் கார்டன் சென்றுஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது புதிய திட்டம் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணுசெய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய திட்டம் ஒன்றை ஜெயலலிதா கூறியுள்ளார். அதுகுறித்து எங்களது கட்சித்தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம். செவ்வாய்க்கிழமைகட்சியின் செயற்குழு கூட்டப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவை கட்சித் தலைமையிடம் தெரிவிப்போம்.அதன் பிறகு எங்களது முடிவை அறிவிப்போம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதராஜன் கூறுகையில், ஒரு முடிவும் ஏற்படவில்லை. செவ்வாய்க்கிழமைமுடிவு தெரிய வரலாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+