சித்திரைத் திருவிழாவுக்குப் பின் தேர்தல்?
சென்னை:
தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தத் தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிமிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
டெல்லியில் மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த சாரங்கி,செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகசட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து டெல்லி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு ஆகியவைகுறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எப்போதுவேண்டுமானாலும் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளோம்.
இருப்பினும் மே 4 முதல் 7-ம் தேதி வரை மதுரையில், உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடக்கவுள்ளதால்,அந்தத் தேதிகளில் தேர்தல் நடத்த வேண்டாம் என்று யோசனை கூறியுள்ளோம்.
தேர்தல் குறித்து மத்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைதேர்தலில் பயன்படுத்த ஆர்வமாக உள்ளோம். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு இருப்பதால் முடிவைபொறுத்து அது அமல்படுத்தப்படும் என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications