மத்திய அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள்: லல்லு
பாட்னா:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக மத்திய அர டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோருகிறார் பிகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ்.
பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய யாதவ், ஆயுத பேர ஊழல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையில் குடியரசுத் தலைவர் தலையிட்டு மத்திய அரசைபதவி நீக்கம் செய்ய வேண்டும்.
பா.ஜ.க. அரசின் கேவலமான நிலையை தனியார் வெப்சைட் நிறுவனம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால் இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்கதேவையில்லை.
நாட்டிற்கு அவமானம் தேடித்தரக்கூடிய இந்த ஊழலில் பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர் அலுவலகம்,,பாரதிய ஜனதா கட்சி , ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க.வின் தலைவர் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து வாஜ்பாய் அரசு பதவியில் நீடிக்க உரிமையில்லை என கூறினார்.
மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடாகா, சட்டீஸ்கார் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளிலும் இந்த ஊழல் எதிரொலித்தது.உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து இம்மாநிலங்களின் சட்டசபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
யு.என்.ஐ.