லத்தீப் கட்சியில் குழப்பம்: 2 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
சென்னை:
அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள இந்திய தேசிய லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்கட்சியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது இறுதியல்ல, பேச்சுவார்த்தை தொடருவதாககட்சித் தலைவர் அப்துல் லத்தீப் அறிவித்துள்ளார்.
அப்துல் லத்தீப் தலைமையிலான இந்திய தேசிய லீக் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்குஅதிமுக பொதுச் செயலாளர் 1 இடம் ஒதுக்கியுள்ளார். இதற்கு கட்சியில் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை லத்தீப் வீட்டில் கூட்டப்பட்டது. கூட்டத்தில்காரசாரமான விவாதம் நடந்தது. அனைவரும், ஒரு சீட் மட்டுமே வாங்கித் தந்த அப்துல் லத்தீப்பைக் குறை கூறினர்.இதனால் கூட்டத்தை விரைவிலேயே முடிப்பதாக லத்தீப் அறிவித்தார்.
வீட்டை விட்டு வெளியே வந்த எம்.எல்.ஏக்கள் நிஜாமுதீன், காதர் மொய்தீன் ஆகியோர் கூறுகையில்,தன்னிச்சையாக அப்துல் லத்தீப் செயல்பட்டுள்ளார். ஒரு சீட் மட்டுமே என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
இதற்கிடையே இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தொகுதிப் பங்கீடுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், யாரோ செய்த சதியால், கட்சியைபிளவு படுத்தம் ஆசையில் சிலர், கட்சி உடைந்து விட்டதாக தவறான செய்திகளைப் பரப்புகின்றனர். இதை மக்கள்நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.