For Daily Alerts
Just In
இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டு தமிழக மீனவர் பலி
சென்னை:
ஜெகதாப்பட்டினம் அருகே இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் 1 தமிழக மீனவர்பலியானார்.
ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை வழக்கம் போல மீன் பிடிக்கச்சென்று கொண்டிருந்தனர். கோபி என்பவரும் மேலும் 2 மீனவர்களும் ஒரு படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் கோபி அங்கேயேஇறந்தார். மற்ற மீனவர்கள் பயந்து போய் வேகமாக கரை திரும்பி பிற மீனவர்களிடம் கூறினர்.
இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பதற்றம், பரபரப்பும்நிலவி வருகிறது.
Comments
Story first published: Thursday, March 15, 2001, 5:30 [IST]