கிராமப் பூசாரிகளுக்கு தனி வாரியம்
சென்னை:
கிராமப்புற பூசாரிகளின் நலனுக்காக தனி வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரையில், மார்ச் 11-ம் தேதி நடந்த கிராமப்புற பூசாரிகள் மாநாட்டில் தனி வாரியம் அரசு நடவடிக்கை எடுக்கும்என முதல்வர் கருணாநிதி உறுதி கூறியிருந்தார். அதன்படி கிராமப்புற பூசாரிகளின் நலன்களைக் கவனிக்கதனியாக வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில், 9 பணி சார்ந்த உறுப்பினர்களுடன், அலுவல் சாரா உறுப்பினர்களாகவேதாந்தம், ஆ.பி.வி.எஸ்.மணியன், ஏ.கே.சவுந்தரராஜன், கனகராஜன், நடராஜன்பூசாரி, பட்டாபி பூசாரி, நடராஜன்பூசாரி, சச்சிதானந்தம் பூசாரி, மங்களகாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பென்ஷன் வாங்கத் தகுதி வாய்ந்த பூசாரிகளின் எண்ணிக்கையை 1500லிருந்து 4000 மாக அதிகரித்தும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications