அதிமுக கூட்டணியில் நீடிப்போம் .. லத்தீப்
சென்னை:
இந்திய தேசிய லீக் கட்சி அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் என அக்கட்சியின் தலைவர் அப்துல் லத்தீப்எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
அப்துல் லத்தீப் தலைமையிலான தேசிய லீக் கட்சிக்கு கூட்டணியில் ஒரு சீட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தக் கட்சிக்கு தற்போதைய சட்டசபையில், 3 சீட்டுக்கள்இருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் லத்தீப் ஒரு சீட் மட்டுமே பெற்று வந்தது கண்டிக்கத்தக்கது என்று கூறி 2 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடிஉயர்த்தியுள்ளனர். இந்த நிலையில், தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம்சென்னையில் நடந்தது.
கூட்டத்திற்குப் பிறகு லத்தீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம். ஒரு சீட்போதாது என்று கருத்து தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் சீட் கேட்டு தொடர்ந்து ஜெயலலிதாவுடன் பேசிவருகிறோம்.
வருகிற 18-ம் தேதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடக்கவுள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில்ஈடுபட்டவர்கள் தவிர பிற உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.