For Daily Alerts
Just In
சென்னை செல்லும் ரயில் தடம்புரண்டது
ஹைதராபாத்:
சென்னைக்கு வந்து கொண்டிந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் 15 பெட்டிகள் தடம்புரண்டன.
இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை செல்வதற்காக வியாழக்கிழமை இரவுசெகந்திராபாத்திலிருந்து கிளம்பியது.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், ஆந்திரா, குண்டூர் - நாயுடு பேட்டை சந்திப்பிற்கிடையே தடம்புரண்டது.
இதில் ரயிலின் 15 பெட்டிகள் சரிந்து விழுந்தன. இந்த ரயில் சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டியது என கூறினர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 16, 2001, 5:30 [IST]