தேர்தல் களத்தில் குதிக்கும் நாடார்கள் சங்கம்
சென்னை:
தமிழகத் தேர்தல் களத்தில் குதிக்கிறது நாடார்கள் சங்கம்.
சென்னை மற்றும் மதுரை கூடிய அனைத்து நாடார்கள் சங்கத்தின் கூட்டத்தில் நாடார் இனத்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாடார்கள் உதவி சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இச்செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக. மற்றும் அதிமுக அணியில் இணைந்து போட்டியிடுமா என்பது குறித்து தகவல் இல்லை. ஆனால், அனைத்து நாடார் சங்கங்களும் இணைந்து ஒரேதலைமையின் கீழ் செயல்பட முடிவு செய்துள்ளன.
தமிழக வியாபார உலகில் தனக்கென தனி இடம் கொண்டுள்ள இனம் நாடார்கள் இனம். தென்மாவட்டங்களில் அதிகமுள்ள இந்த இனத்தினர்தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை போன்றவற்றிலும் பரவலாக இருக்கின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இந்த இனத்தினர் தங்களுக்கென 442 சங்கங்களை கொண்டுள்ளனர். இவை அனைத்தும் மதுரை மற்றும் சென்னையில் நடைபெற்றகூட்டங்களில் பங்கேற்றன.
யு.என்.ஐ.