ஹர்பஜன் பந்துவீச்சில் சுருண்டது ஆஸி.அணி
சென்னை:
சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்த ஆஸி. அணி 391 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்து விட்டது.
திங்கள் கிழமை நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தின் போது ஹர்பஜனின் சுழல்பந்து வீச்சில் சிக்கிய ஆஸி.அணி 65 ரன்களுக்கு தனது கடைசி 7விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸி. கேப்டன் ஸ்டீவ் வாஹ் ஆட்டம் இழந்தவுடன் மற்ற வீரர்கள் வரிசையாக ஹர்பஜனின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். ஹர்பஜன் இத்தொடரில் 2வதுமுறையாக ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கடந்த 2 போட்டிகளை போல் அல்லாமல் சென்னை டெஸ்டில் இந்தியாவின் துவக்க ஜோடி 123 ரன்கள் எடுத்தது. ஆஸி.யின் வேகப்பந்துகளை திறமையாகசமாளித்தது இந்திய துவக்க ஜோடி.
இவர்களை பிரிக்க வந்தனர் வார்னேவும் காலின் மில்லரும். வார்னே பந்தில் பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் 61 ரன்கள் எடுத்து இருந்தரமேஷ்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. 84 ரன்கள் எடுத்துள்ள தாஸ் தனது 2வதுடெஸ்ட் சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறார்.
கோல்கத்தா டெஸ்டில் இரட்டை சதம் அடித்த லஷ்மண் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். 2வது நாள் ஆட்டத்தில் ஆடிய 3 இந்தியவீரர்களும் ஆஸி.யின் சுழல் பந்து வீச்சை சமாளித்து அரை சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications