ப.சிதம்பரத்துக்கு 3 தொகுதிகள்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பைத் துவக்கி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ப.சிதம்பரம் அமைப்புக்கு 3தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்படுத்தியதை எதிர்த்த முன்னாள் அமைச்சரும், மூத்த த.மா.கா. தலைவருமான ப.சிதம்பரம்புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிமுக-தமாகா கூட்டணியை எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனது அமைப்பின் ஆதரவை தெரிவிப்பதற்காக சமீபத்தில் முதல்வர் கருணாநதியை அண்ணா அறிவாலயம் சென்று சந்தித்தார். அப்போதுவாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை த.மா.கா ஜனநாயகப் பேரவை அமைப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் புரசை ரங்கநாதன், காரைக்குடி சுந்தரம் ஆகியஇருவரும் அண்ணா அறிவாலயம் வந்தனர். முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தனர்.
அவர்களுடன் பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், ப.சிதம்பரத்தின் தமாகா ஜனநாயகப் பேரவை அமைப்புக்கு 3தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் சிதம்பரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவர்.
திமுக, 155 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடும். புதிய தமிழகம் கட்சியுடன் திங்கள்கிழமை மாலையில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவுசெய்யப்படும் என்றார்.
ஏற்கனவே சிதம்பரம் அமைப்பில் 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒருவர் ரங்கநாதன் மற்றவர் காரைக்குடி சுந்தரம். மூன்றாவது சிவகாசியில்சொக்கர் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆர்.எம்.வீரப்பனுக்கு 2 சீட்:
இதுவரை கருணாநிதியின் மனதில் இடம் பிடித்து வந்த ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகத்திற்கு இந்த முறை தேர்தலில் இடம்கொடுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். கழகத்திற்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சி திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும். கட்சிப் பொதுச்செயலாளர் ஜெகத்ரட்சகன், முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய பின் இந்த உடன்பாடு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications