சிதம்பரத்துக்கு கிடைத்த ஆதரவு
சென்னை:
சிதம்பரத்தை ஆதரித்தால் கட்சி பதவி காலியாகிவிடும் என்பதால் த.மா.கா. நிர்வாகிகள் யாரும் சிதம்பரத்தை ஆதரிக்க முன்வரவில்லை.
அதிமுக கூட்டணியில் த.மா.கா. இணைந்ததை எதிர்க்கும் சிதம்பரம் அக்கட்சியில் இருந்து கொண்டே த.மா.கா. ஜனநாயக பேரவை என்ற புதியஅமைப்பை தொடங்கினார்.
சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்களை த.மா.கா.வில் இருந்து நீக்க கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் த.மா.கா.தலைவர் மூப்பனார்.
சிதம்பரத்தின் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை மட்டும் பறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். கட்சி பதவியை காப்பாற்றிக் கொள்ள முயலும்நிர்வாகிகள் யாரும் சிதம்பரத்தை ஆதரிக்க முன்வரவில்லை.
கட்சி அலுவலகத்தை மறந்து இருந்த கட்சி நிர்வாகிகள் பலர் தற்போது கட்சி அலுவலகமே கதி என கிடக்கின்றனர். இல்லையெனில், சிதம்பரத்தின்ஆதரவாளர் என்ற முத்திரையுடன் கட்சி பதவி போய்விடும்.
இதனிடையே, தனது சென்னை இல்லத்தில் ஆதரவாளர்களை சந்திப்பது சிரமமாக இருப்பதால் வேறு அலுவலகம் தேடுகிறார் சிதம்பரம். தலைவரின்உத்தரவை செயல்படுத்த புரசைவாக்கம் பகுதியில் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்கிறார் புரசை தொகுதி எம்.எல்.ஏ.ரங்கநாதன்.