நாடாளுமன்றம் மீண்டும் ஸ்தம்பிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆயுத பேர ஊழல் தொடர்பாக வாஜ்பாய் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் எனஎதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் திங்கள்கிழமை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

தெஹல்கா டாட்காம் என்ற இன்டர் நெட் நிறுவனம் பல அரசியல் தலைவர்கள் ஆயுதபேர ஊழலில் ஈடுபட்டிருப்பதாக இந்த மாதம் 14-ம் தேதி வீடியோ ஆதாரங்களுடன்வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள்வற்புறுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைககள்பாதிக்கப்பட்டன.

சென்ற வாரம் புதன், வியாழன், வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகளின் அமளியால்நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட முடியவில்லை. சனி, ஞாயிறுவிடுமுறைக்குப்பின் நாடாளுமன்றம் மீண்டும் திங்கள்கிழமை கூடியது.

ஆனால், இரு அவைக்களிலும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கூடிவாஜ்பாய் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வாஜ்பாய் அரசுக்கு எதிரானகோஷங்களில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எந்த விதமானநடவடிக்கையிலும் ஈடுபடாமல் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் நடவடிக்கைகள்தொடர்ந்து நடைபெறுமா என்பது சந்தேகமே.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+