வாஜ்பாய்க்கு அகாலி தள ஆதரவு தொடரும்
பாரிட்கோட்:
தெகல்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான எங்கள் உறவை, தெகல்கா டாட் காம் இணையதளம்கிளப்பியுள்ள ஆயுதப் பேர ஊழலால் முறித்துக் கொள்ள மாட்டோம் என்று சிரோன்மணி அகாலி தள பொதுச்செயலாளர் சுக்பீர் சிங் பாதல் திங்கள்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறுகையில், வாஜ்பாய் அரசை ஆட்டம் காண வைக்கும் வகையில் உள்ளது ஆயுதப் பேர ஊழல். இந்தஊழலை வெளிக்கொண்டு வந்த தெகல்கா டாட் காம் இன்று உலகம் முழுவதும் பேசப்படுவதாக உள்ளது.
இந்த ஆயுதப் பேர ஊழலில் மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம்.
வாஜ்பாய் அரசு தனது பதவிக்காலம் முடியும் வரை ஆட்யில் தொடர வேண்டும். ஆட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதுஎன்ற பேச்சுக்கே இடமில்லை.
தெகல்கா டாட் காம் இணைய தளம் வெளிக்கொண்டு வந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து சுப்ரீம் கோர் விசாரணைக்குத் தயார் என்று மத்திய அரகூறியிருப்பதை வரவேற்கிறேன்.
நாங்கள் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருவோம். தெகல்கா ஊழல் குற்றச்சாட்டு விரைவில் முடியும் என்று நம்புகிறோம்.இவ்வாறு பாதல் கூறினார்.
சிரோன்மணி அகாலி தள பொதுச்செயலாளர் பாதல் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகனாவார்.
யு.என்.ஐ.