துருக்கியில் நிலநடுக்கம்
அன்காரா (துருக்கி):
துருக்கியின் மத்தியப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கான்டிலி பூகம்பவியல்துறை மையத்தின் இணையதளத்தில், துருக்கியின் மத்தியப்பகுதியில் உள்ள ஆப்யானில் காலை6.21 க்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
இதே போல் கடந்த டிசம்பர் மாதமும் இதே இடத்தில் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்யான் துணை ஆளுநர் சியா குலெர், கூறுகையில், ஆப்யான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை எங்களுக்குக்கிடைக்கவில்லை என்றார்.
1999 ம் ஆண்டு துருக்கியின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்களில் 18,000 பேர் கொல்லப்பட்டனர். இதில்ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications