ஆயுத பேர ஊழல்: இன்னொரு கேஸட்டை வெளியிட்டது தெகல்கா
டெல்லி:
பாதுகாப்புத்துறையில் ஆயுதங்கள் வாங்குவதில் பாரதீய ஜனதா, சமதா கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளதை வெளியுலகுக்குக் கொண்டு வந்த தெகல்கா டாட் காம் நிறுவனம் இந்த ஊழல்தொடர்பாக மேலும் ஒரு வீடியோ கேஸட்டையும் வெளியிட்டுள்ளது.
இந்த டாட் காமின் தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை இந்த இரண்டாவது கேஸட்டை வெளியிட்டார். இதில்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டில் வைத்து ஒரு நபர் ரூ.2 லட்சம் வாங்குவதுகாட்டப்பட்டுள்ளது. இந்த நபர் ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சியின் தலைவி ஜெயா ஜேட்லியின் கூட்டாளிஎன்று தெகல்கா டாட் காம் கூறுகிறது.
ஆயுத வியாபாரிகள் போல நடிக்கும் தெகல்கா டாட் காம் நிருபர்களை அந்த நபர் ஜார்ஜ் பெர்னாணடசின் வீட்டுக்குள் அழைத்துச்செல்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சரின் வீடு என்பதால் வீட்டுக்குள் சூட்கேஸ் எடுத்துச் செல்ல முடியாது என்று கூறி கமிஷன்தொகையை (ரூ. 2 லட்சம்) வீட்டுக்கு வெளியில் வைத்தே வாங்கி ஒரு பேப்பரில் சுருட்டிக் கொண்டு உள்ளே செல்கிறார்.
பின்னர் இந்த ஆயுத வியாபாரியை (நிருபரை) பெர்னாண்டஸ் வீட்டில் உள்ள ஜெயா ஜேட்லியின் அறைக்கு அழைத்துச்செல்கிறார். நிருபரின் பேசும் ஜேட்லி, பணத்தை அமைச்சர் நிவாஸ் பிரசாத்துக்கு அனுப்பி விடுங்கள். அவர் தான் கட்சியின் தேசியகவுன்சில் கூட்டத்தை நடத்துகிறார் என்று சொல்கிறார்.