துணிந்தார் வடிவேலு: 21 இடங்களில் தனித்துப் போட்டி
சென்னை:
மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்குத் துணிச்சல் வந்து விட்டது. சட்டசபைத் தேர்தலில் 21 இடங்களில் தனித்துப்போட்டியிடப் போவதாக அது அறிவித்துள்ளது.
அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த கட்சிதான் தேவ கெளடாவைத் தலைவராகக் கொண்ட மதச்சார்பற்றஜனதாதளம். இந்தக் கட்சிக்கு ஒரே ஒரு சட்டசபை தொகுதியை ஒதுக்கினார் ஜெயலலிதா.
அதிர்ச்சியடைந்த கட்சித் தலைவர் ஜி.ஏ.வடிவேலு, தேவ கெளடா மூலம், தானும் பேசி கூடுதல் சீட்டுக்கள் பெறமுயற்சித்தார். ஆனால் அது பலிக்கவில்லை.
இதையடுத்து கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில், புதன்கிழமை நடந்தது. கூட்டத்தில்,அதிமுகவைக் குறை கூறியும், சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில் கட்சித் தலைவர் வடிவேலு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். தொகுதிகள்,வேட்பாளர்கள் விவரம்:
பத்மநாபபுரம்: முகம்மது இஸ்மாயில் அல்லது அருள்ராஜ்.
கிள்ளியூர்: மனோ தங்கராஜ்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: எஸ்.எம்.டி.ராஜகோபால்.
விருதுநகர்: ஏ.எஸ்.ஏ.ஆறுகம்.
சிங்காநில்லூர்: எம்.பொன்னுச்சாமி.
மதுரை மத்திய தொகுதி: ஜான் மோசஸ்.
ஊட்டி: போஜன்.
காட்டுமன்னார் கோவில்: அசோகன்.
செங்கம்: சேட்டு
செங்கல்பட்டு: பலராமன்.
திருவொற்றியூர்: வெள்ளைச்சாமி நாடார் அல்லது குணசேகரன்.
குடியாத்தம்: தேவராஜ் அல்லது நீலமேகம்.
பாலக்கோடு: பாடி நாகராஜன்.
ஒசூர்: சிவண்ணா.
ராயபுரம்: நல்லத்து.
தொண்டத்தூர்: சந்திரசேகரன்.
அவினாசி: ராஜன்.
கடலூர்: சிக்கையா
சோழவந்தான்: செல்லப்பாண்டி.
போடி: முருகேசன் அல்லது வீரபத்ரன்.
புவனகிரி: பசலூர் ரஹ்மான்.