இந்திய பெண்களிடம் விசா கட்டணம் வசூலிக்க இலங்கை திட்டம்
கொழும்பு:
இலங்கையைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கு மூன்று வருடங்களுக்கு மேல் வசித்துவரும் இந்தியப் பெண்களுக்கு வருடாந்திர விசா கட்டணமாக ரூ. 20,000 வசூலிக்க இலங்கை அரசுதிட்டமிட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி ஆண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ள இந்தியப் சேர்ந்தபெண்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தபெண்கள்.
இதுதவிர மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் பலர் இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்பேகுடியேறியுள்ளனர். இவர்கள் தங்கள் மனைவி, குடும்பங்களுடன் இலங்கையில் வசித்து வருகின்றனர். இதில்ஆண்களுக்கு மட்டுமே இலங்கை அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் மனைவியருக்கு குடியுரிமைவழங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து இந்தியக் குடியுரிமையுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இதுநாள் வரை, இந்தப் பெண்கள் தங்களது விசாவை எவ்விதக் கட்டணமும் இன்றி ஆண்டுக்கு ஒரு முறைபுதுப்பித்து வந்தனர்.
தற்போது இலங்கை அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டப்படி, இந்தப் பெண்கள் ரூ 20,000 செலுத்தினால் தான்ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின் விசா நீட்டிக்கப்படும்.
இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கூறுகையில், 1968 ம் ஆண்டு முதல் நான் இலங்கையில்தங்கியுள்ளேன். இவ்வளவு வருடங்களாக என் மனைவியின் விசாவைப் புதுப்பிப்பதற்காக ஒரு பைசா கூடகட்டவில்லை. இலங்கை அரசு அறிவித்துள்ள தொகை மிகவும் அதிகமானது என்றார்.
இலங்கையின் இந்த புதிய திட்டத்துக்கு உள்நாட்டிலும் இந்தியாவிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பும் எனத் தெரிகிறது.
யு.என்.ஐ.