கோவையில் கார் கடத்தல் கும்பல் கைது
கோவை:
கோவையில் கார் கடத்தல் கும்பல் மற்றும் கொள்ளைக் கும்பல் ஒன்று பிடிபட்டது. இந்தக் கும்பலிடமிருந்து ரூ. 9லட்சம் மதிப்புள்ள வாகனங்கள், 3 மாருதிக்கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன.
கோவையில் ஆங்காங்கே பல இடங்களில் திருட்டுப் போனது. இந்த திருட்டைக் கண்டுபிடிக்க தனிப்படைபோலீசார் நியமிக்கப்பட்டனர். இந்தப் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். அப்போது காந்திபுரம்பகுதியில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர்கள் ஒரு கும்பலாகச் செயல்பட்டு பல்வேறு இடங்களில் கார்களை திருடியது தெரியவந்தது. மேலும் இந்தக் கும்பல் போலியான ஆர்.சி புத்தகம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள்கொடுத்த தகவலின் அடிப்படையில் சுமார் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள கார்களை மீட்டனர்.
இந்தகார்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த பஷீர் (42), பாலுச்சாமி (35) ஆகியோரைப் போலீசார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications