பெருந்துறையில் 600 ஏக்கரில் ஜவுளித்தொழிற்சாலை

Subscribe to Oneindia Tamil

பெருந்துறை:

பெருந்துறையில் 600 ஏக்கர் நிலப் பரப்பில் ஜவுளித் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவுள்ளது என தமிழ்நாடுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் பொதுமேலாளர் தெரிவித்தார்.

கோவை இந்திய வர்த்தக சபை சார்பில் நடந்த தொழில் கருத்தரங்கில் கலந்து கொண்டு தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு நிறுனத்தின் (சிப்காட்) பொது மேலாளர் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது:

சிப் காட் நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் ஈரோட்டில் மட்டும் 2 ஆயிரத்து800 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழில் வளர்ச்சி மையம் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு முதல் கட்டமாக ஆயிரத்து 300 ஏக்கரில் அடிப்படை வசதிகள், அகன்ற ரோடு, காவிரி ஆற்றிலிருந்துதண்ணீர், பாதளசாக்கடை, ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு அருகில் பெருந்துறையில் சிப்காட் நகரம் அமைய உள்ளது. இங்கு 600ஏக்கர் நிலப்பரப்பில் சாயத் தொழில், ஜவுளித் தொழில்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும். இதுவரை 50 சாயத் தாழிற் சாலைகளுக்கு இங்கு 180 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசனையின் படி பொது சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும்ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 36 லட்சம் லிட்டர் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்படும். இதற்கானஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மற்ற வகைத் தொழில்களான பிளாஸ்டிக், ரசாயணம், கயிறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும். மேலும் சமையல்எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை ஒன்றும் ஏற்படுத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+