ஜெ.தேர்தலில் போட்டியிடுவாரா? சேஷன் பதில்
கோவை:
ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்பதை தேர்தல்அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் கூறியுள்ளார்.
சனிக்கிழமை கோவையில் நிருபர்களிடம் சேஷன் கூறியதாவது:
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பது குறித்து விஷயத்தில் தேர்தல் அதிகாரி கோல்கீப்பர் போல் செயல்படுவார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்தொழில் நுட்பத்தில் புதிய முன்னேற்றம் என்றுதான் நான் எண்ணியிருந்தேன்.
இப்போது மேலும் தொழில் நுட்பம் முன்னேறி இருப்பதால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தால் தவறுஏற்படாது என உறுதியாக கூற முடியாது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து நான் கருத்துகூற விரும்பவில்லை.
வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை கேட்டு பெறும் உரிமை தேர்தல்அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும். ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் ஒருவரின்வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் அதிகாரம் எந்த அரசு அதிகாரிக்கும் கிடையாது.
தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளம் வெளியிட்டுள்ள ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறதுஇப்போதுள்ள அரசியல் தலைவர்கள் நாட்டு நலனில் அக்கறை வதைவிட தங்கள் கட்சி பற்றியும், தங்கள் சொந்தநலனிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications