பவானி ஆற்றின் குறுக்கே ரூ 2 கோடியில் மேம்பாலம்
மேட்டுப்பாளையம்:
நெல்லித்துறையில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ. 2 கோடி செலவில் பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலம்நீலகிரியில் மலைச் சரிவு ஏற்பட்டால் மாற்றுப் பாதையாக அமையும்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் நெல்லித்துறை உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்துநெல்லித்துறைக்குச் செல்ல இதுவரை படகு சவாரி மட்டுமே பயன்பட்டு வந்தது.
படகில் பவானி ஆற்றைக் கடந்து வந்த பொதுமக்களுக்கு இப்போது அவர்களின் வசதிக்காக புதிதாகப் பாலம்அமைக்கப்படுகிறது.
101 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் பவானி ஆற்றின் மேல் கட்டப்படுகிறது. 5 கண் பால அமைப்பில், 7. 5 மீட்டர்அகலம் கொண்டதாக பாலம் அமைக்கப்படும். மேலும், 190 மீட்டருக்கு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படுகிறது.
இப்பாலம் அமைக்கும் பணி ஒரு ஆண்டிற்குள் முடிந்து விடும். இதனால் ஊட்டி செல்ல மாற்றுப் பாதை கிடைக்கவழி ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் ஏற்படும் மலைச் சரிவால், மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி வழியாகத்தான் இதுவரை சென்று வர முடிகிறது.
நெல்லித்துறையில் பவானி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்ட பின்னர், இப்பாலம் வழியாக பில்லூர் டேம்வழியாக ஊட்டிக்குச் சென்றடைய முடியும். மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் எளிதாக தங்கள்காய்கறிகளை மேட்டுப்பாளையத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்ய முடியும்.
இந்தப் பாலம் அமைக்க நபார்டு வங்கி உதவி செய்கிறது. இந்தப் பாலம் அமைப்பு பணியை நபார்டு வங்கியின்உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார்.