சென்னையில் கடும் வெயில்: மக்கள் பெரும் அவதி
சென்னை:
சென்னையில் கடும் வெயில் வீசி வருகிறது.
இன்னும் ஒரிஜினல் கோடை காலமே ஆரம்பிக்காத நிலையில் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக வெப்பம்100 டிகிரியைத் தாண்டிவிட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் அளவுக்கு வெயில்மண்டையைப் பிளக்கிறது.
காலை 11 மணிக்கே 95 டிகிரி வெயில் அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 102டிகிரி வெயில் வீசியது.
கோடை ஆரம்பிக்கும்போது இப்படி மிக அதிகமான வெப்பம் நிலவுவது வாடிக்கை தான என்கிறது வானிலைஆராய்ச்சி மையம்.
பிளாட்பாரங்களில் வாட்டர் மெலன் (தண்ணீர் பழம்), இளநீர் விற்கும் கடைகளில் கூட்டம் கூட்டமாய் மக்கள் நின்றுஅதை வாங்கி சாப்பிடுவது சென்னையில் சாதாரணக் காட்சியாகிவிட்டது.
வெயிலுடன் தண்ணீர் பஞ்சமும் வந்துவிட்டதால் சென்னையில் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும்:
சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் என அனைத்துப் பாகங்களிலும் கடும் வெயில்வீசுகிறது.
ஆனால், இங்கெல்லாம் சென்னை போல தண்ணீர் பஞ்சக் கொடுமை இல்லை.












Click it and Unblock the Notifications