தி.மு.க. ஆதரவு விவகாரம்: புதிய நீதிக் கட்சி உடைந்தது
சென் னை:
புதிய நீதிக் கட்சியின் துணைத் தலைவர் சுத்தானந்தன், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில்செவ்வாய்க்கிழமை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் அனுமதி பெறாமல் அவர்கருணாநிதியைச் சந்தித்தார்.
சண்முகம் தனியாகப் போட்டியிடலாம் என்று கூறி வருகிறார். இதன்மூலம் அந்தக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது.
ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் அந்தரத்தில் நின்று வந்தது. திமுக கூட்டணியில் இக்கட்சிஇணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக அதிக தொகுதிகள் தர தயாராக இல்லை என்பதால் அந்த அணியில் சேரமாட் டோம் என்று ஏ.சி.சண்முகம் கூறி விட்டார்.
இந் நிலையில் கட்சித் தலைமையின் செயல்பாடு தொண்டர்களைக் குழப்பும் விதத்தில் இருப்பதாக துணைத் தலைவர்சுத்தானந்தன் அறிக்கை விட்டார். இதையடுத்து கட்சிக்குள் பிளவு ஏற்படத் துவங்கியது.
செவ்வாய்க்கிழமை பிளவு அதிகாரப்பூர்வமாக வெளிப்பட்டது. சுத்தானந்தன் மட்டும் தனியாக வந்து கருணாநிதியைச் சந்தித்துதொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்பேசு கையில், கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் அனுமதி இல்லாமல்தான் கருணாநிதியைச் சந்திக்க வந்தேன்.
புதிய நீதிக் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேசினேன். எனக்கும், ஏ.சி.சண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுஇருப்பது உண்மைதான் என்றார்.
பின்னர் கருணாநிதி வெளியே வந்தபோது அவரைச் சூழ்ந்த செய்தியாளர்கள், புதிய நீதிக் கட்சிக்கு தொகுதிப் பங்கீடுமுடிந்துவிட்டதா என்று கேட்டபோது, பூர்வாங்கமாகத்தான் பேசினோம். வேறு விசேஷம் இல்லை என்றார்.