த.மா.காவின் உயிரை வாங்கும் காங்கிரஸ்
சென்னை:
த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது. த.மா.கா. போட்டியிட முடிவு செய்துள்ளதொகுதிகள் பலவற்றில் போட்டியிட காங். விருப்பம் வெளியிட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு 47 தொகுதிகள்ஒதுக்கப்பட்டன.
அதோடு 70 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்த அதிமுக தலைமை அவற்றில் இருந்து 47 தொகுதிகளை தேர்வு செய்ய கூறி இருந்தது.
காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளின் பட்டியலை பெற்ற த.மா.கா.விற்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
த.மா.கா. போட்டியிட உள்ள 30 தொகுதிகளில் முக்கியமான தொகுதிகள் பலவற்றை காங்கிரஸ் கேட்டு உள்ளது.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக உள்ள மூப்பனாருக்கு அவருடைய கட்சியிலேயேவேலைகள் அதிகம்.
சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்குவது, தற்போது உள்ள எம்.எல்.ஏக்களில் யாருக்கு சீட் ஒதுக்குவது, த.மா.கா. போட்டியிட வேண்டிய தொகுதிகளைதேர்வு செய்வது போன்ற சிக்கலான வேலைகள் அவருக்கு உள்ளன.
இது போதாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர்களான மரகதம் சந்திரசேகர், திண்டிவனம் ராமமூர்த்தி, அன்பரசு ஆகியோர் தஙகளுக்கு சாதகமானதொகுதிகளை ஒதுக்குமாறு மூப்பனாரை வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், இரு கட்சிகளுக்கும் சேர்த்து தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் மூப்பனார் இருக்கிறார்.
த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியலை மூப்பனார் அளித்த உடன் பிரச்சனை முடிந்து விடாது. அதில் ஜெயலலிதா தன்பங்கிற்கு கைவைத்து ஏதாவது தொகுதிகளை மாற்றினால் மூப்பனாருக்கு தலைவலி தான்.