For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குப் பதிவு எந்திரங்களுக்குத் தடை வருமா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்க ளை சட்டச பைத் தேர்தலில் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தத் த டை விதிக்க வேண்டும் என்று கோரிஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை தலை மை நீதிபதி என். கே. ஜெயின், சம்பத் ஆகியோர் அடங்கிய முதலாவது டிவிஷன் பெஞ்ச் விசாரித்துவருகிறது.

இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் பி.ஆர். ராவும், மத்திய அரசின் சார்பில் வி.டி. கோபாலனும் ஆஜராகினர். வியாழக்கிழமைஇந்த வழக்கு விசார ணைக்கு வந்தது. நீதிபதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்கம் காட்டும்வகையில் இயந்திரங்கள் தயாராகக் கொண்டு வரப்பட்டிருந்தன.

இருப்பினும், செயல் விளக்கம் தேவையில்லை என நீதிபதி ஜெயின் கூறிவிட்டார். பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X