பல்லடம் அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளை
பல்லடம்:
துப்பாக்கியால் சுட்டு நகை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். கொள்ளையர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் காயமடைந்தார்.
கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.ஜவுளிக்கடை அதிபர். இவர் செங்குட்டுத் தோட்டத்தில் வீடுகள் கட்டி வாடகைக்குவிட்டுள்ளார். இந்த வீடுகள் ஒரே வளாகத்தில் உள்ளன.
புதன்கிழமை அதிகாலை 10 பேர் கொண்ட கும்பல் இந்த வீட்டிற்குள் புகுந்தது. வீட்டின்மெயின்கேட்டை கடப்பாரையால் உடைத்தனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்ததமிழ்ச் செல்வி எட்டிப்பார்த்தார்.
இதனை அறிந்த கொள்ளையர்கள் தமிழ்ச் செல்வியை தொடர்ந்து சென்று அவரதுவீட்டிற்குள்ளும் புகுந்தனர். அங்கிருந்த அவரது கணவரையும் கடப்பாரையால்தாக்கினர்.
தமிழ்ச் செல்வி அணிந்திருந்த தங்க நகைகளைப் பிடுங்கினர். மேலும்., வீட்டிற்குள்இருந்த ஒரு சூட்கேசை எடுத்துச் சென்றனர். இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில்இருந்த தாமோதரன் மற்றும் சிலர் வெளியே வந்து கொள்ளையர்களைப் பிடிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், கடப்பாரையால் தாக்கினர். மேலும்துப்பாக்கியால் சுட்டனர். இதில் தாமோதரன் தொடையில் குண்டு பாய்ந்தது.












Click it and Unblock the Notifications