For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மண்டையைப் பிளக்கிறது வெயில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோடை மாத துவக்கத்திலேயே தமிழகத்தில் வெப்பம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

கோடைகாலத்தில் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது வழக்கம்தான்.ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகம் எனமக்கள் கூறுவதும் வழக்கமான ஒன்றுதான்.

ஏப்ரல், மே மாதங்களில்தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டோமார்ச் மாதத்திலேயே வெப்பம் மக்களை கதிகலங்க வைத்துக் கொண்டிகுக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எல்.கே. சுப்ரமணியம்கூறுகையில், ஏப்ரல்,மே. ஜூன் மாதங்களில் வெப்பநிலை அளவு 34 டிகிரி செல்சியஸ்( 93.2 டிகிரி பாரன்ஹீட்) என்ற வழக்கமான அளவைக் காட்டிலும் 5 அல்லது 6 டிகிரிஅதிகமாக இருக்கும. அப்போது அனல் காற்றும் வீசும். இதன் காரணமாக வெயிலின்கடுமையும் அதிகமாக இருக்கும்.

சென்னையில் சென்ற 2 நாட்களாக வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியிருக்கிறது.மற்ற நகரங்களிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கிறது.

இப்போது வெப்பநிலை அதிகமாக இருப்பாதல் இனி வரும் நாட்களில் வெப்பநிலைஅதிகமாகிக் கொண்டே செல்லும் என கூற முடியாது.

சென்னை மீனம்பாக்கத்தில் புதன்கிழமை வெப்பநிலை 98 டிகிரி என்ற அளவிற்குகுறைந்துள்ளது. வெப்பநிலை அளவில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

காலை நேரத்தில் காற்றில் ஈரப்பதம் இருக்கும். பகலில் குறையும். சென்னையில் மாலைநேரத்தில் கடற்காற்று வீசத் தொடங்குவதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாகும். வெப்பஅளவு குறையும். ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பதால் வியர்வை அதிகமாக இருக்கும்.

மதுரை. திருச்சி. சேலம் போன்ற நகரங்களில் கடற்காற்றுக்கு வாய்ப்பு கிடையாது.அங்ரு வெயில் மாலை வரை தணியாது.

சென்னையில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட்வெப்பம் நிலவியது. சென்ற ஆண்டு மே மாதம் அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட்வெப்பம் நிலவியது. 1910ம் ஆண்டுதான் மிக அதிகமாக 113 டிகிரி பாரன்ஹீட்நிலவியது. இந்த அளவை வெயில் அதிகமாகுமா என இப்போதே கூற முடியாது.

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. ஜுன் மாதம்தென் மேற்கு பருவமழை வந்தால் குடிநீர் பஞ்சம் தீரும். கடும் வெப்பத்திலிருந்தும்தப்பிக்கலாம் என்றார்.

மற்ற நகரங்களில் வெப்பம் குறைவாக காணப்படலாம். ஆனாலும் அங்கும் மக்களின்துன்பம் குறைவாக இல்லை.

புதன்கிழமை மதுரையில் 105 டிகிரி வெப்பமும், வேலூரில் 105 டிகிரி வெப்பமும்,திருச்சியில் 104 டிகிரி வெப்பமும், சேலத்தில் 102 டிகிரி வெப்பமும், கோவையில் 99டிகிரி வெப்பமும் நிலவியது.

இப்போதே வெயில் இந்த கொளுத்து கொளுத்துகிறது. சித்திரை மாதம் கத்திரி வெயில்என்பார்கள், அதையும் அக்னி நட்சத்திர நாட்களையும் எண்ணி மக்கள் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X