ஷார்ஜா போட்டி: 3 ஆண்டுகள் இந்தியா பங்கேற்காது
டெல்லி:
அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஷார்ஜா போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கலந்து கொள்ளாது எனஅறிவிக்கப்பட்டிருக்கிறது.
வருகிற 8ம் தேதி ஷார்ஜாவில் துவங்க உள்ள 3 நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணிபங்கேற்பதால் இந்திய அணி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
அதோடு, கிரிக்கெட் விளையாடும் நாடுகளைத் தவிர மற்ற இடங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில்இந்திய அணி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கிரிக்கெட் வீரர்களின் நல நிதிக்காக ஆண்டுக்கு இருமுறை ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில்இந்திய அணியை பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டெல்லி வந்தார் போட்டி அமைப்பாளர்ஷேக் அப்துர் ரஹ்மான் புகாதிர் .
ஆனால், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்திக்க முடியாததால் ஷார்ஜா திரும்பிய அவர்நியூஸிலாந்து அணியை ஷார்ஜாவில் பங்கேற்க அழைத்தார்.
அந்த அணியும் அதற்கு ஒப்புக்கொண்டதால் ஷார்ஜா போட்டியில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூஸிலாந்துஅணிகள் பங்கேற்கின்றன.
யு.என்.ஐ.