இலங்கை இசை அரங்கில் குண்டுவெடிப்பு: 11 பேர் சாவு
கொழும்பு:
இலங்கையில் தலைநகர் கொழும்பிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள க்ரோனிகாலா பகுதியில் இரண்டுஇந்தியர்கள் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இசை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இரண்டு இந்தியர்களும் காயமின்றி உயிர்தப்பினர்.
இதுகுறித்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நபர் கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த பாடகிகள் ரித்திகாமற்றும் ஷர்மிளா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை க்ரோனிகாலா பகுதியில் உள்ள இசை அரங்கில் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் குண்டுவெடித்தது.
இசை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த பெரும்பாலான மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பில்,11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 120 பேர் க்ரோனிகாலா பகுதியில் உள்ளமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இரண்டு பெண் பாடகிககளும் காயமின்றி தப்பித்தனர்.
மும்பையைச் சேர்ந்த பாடகிகள் ரித்திகாவும், ஷர்மிளாவும் சேர்ந்து இலங்கையில் உள்ள பாப் இசைப்பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த வந்திருந்த போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதுஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications