For Quick Alerts
For Daily Alerts
Just In
பாக்.கில் நெரிசலில் சிக்கி 32 யாத்திரிகர்கள் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள பஞ்சாப் டவுன் பகுதியில் உள்ள பாபா பரியூதின் காஞ்ச் சாகர் என்றஇடத்தில் மசூதியில் தொழுகை நடத்த வந்த யாத்திரிகர்களில் 32 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் 27 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மொகரம் பண்டிகையையொட்டி பெஹாஸ்தி தார்வாசா பள்ளிவாசலில் கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம் இன மக்கள் காஞ்ச் சாகர் பகுதிக்கு வந்தனர்.
அப்போது கூட்டம் கட்டுக்கடுங்காமல் இருந்ததால் நெரிசலில் சிக்கி ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதில் 32பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்துமாறுபாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, April 1, 2001, 5:30 [IST]