கோழி தின்னும் ஆடு"
கோவை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மீன் தின்னும் ஆடு தான் பரபரப்பாகப் பேசப்பபட்டது. இப்போதுஇன்னும் ஒரு ஆடு, கோழியைத் தின்னுகிறது.
மனிதனைப் போலவே ஆடும் அசைவம் சாப்பிடும் ஜீவனாக மாறி வருவது கோவை நகரில் வியப்பிற்குரியவிஷயமாகவே உள்ளது. கோவை உக்கடத்தில் கோழிக்கடை வைத்திருப்பவர் பழனிச்சாமி என்ற கோபால்.இவருடைய பெயரே கோழிக்கடை கோபால் என்பது தான்
இவர் தனது கடையில் ஒரு ஆட்டை வளர்த்து வருகிறார். சிறு குட்டியாக இருக்கும் போது இந்த ஆடு முதலில்கோழி இறைச்சியில் மனிதனுக்குப் பயன்படாத தேவையற்ற பகுதியான குடலை சாப்பிடத் தொடங்கியது.
பின்னர், இப்போது கோழி இறைச்சியையும் ருசித்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளது. கடந்த ஓராண்டாக கோழிஇறைச்சியையும் சாப்பிட்டு வருகிறது.
இதற்கென தினமும் 200 கிராம் முதல் 500 கிராம் வரை இறைச்சியை ஆட்டுக்கு போட்டு வளர்த்து வருகிறார்கோழிக் கடை கோபால். "கலிகாலம் என்பது சரியாகத் தான் இருக்கும் போலிருக்கிறது.












Click it and Unblock the Notifications