ஒரே நாளில் தேர்தல்: மே.வங்க கட்சிகள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்துவதற்கு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மேற்கு வங்காளத்தின் 294 சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்சனிக்கிழமை அறிவித்தது.

அனைத்து தொகுதிகளிலும் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல்முடிந்து மே மாதம் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

தேர்தலின் போது நடைபெறும் தில்லுமுல்லுகளை தவிர்க்க அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க உள்ளிட்டகட்சிகள் கோரி வந்தன.

அதற்கேற்ப தேர்தல் ஆணையமும் மே மாதம் 10ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனை பா.ஜ.க.,மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் வரவேற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சி இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும், அக்கட்சியும் தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என கோரி வந்தது.

ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதை வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் அனில் பிஸ்வாஸ், அடுத்த வாரமேதேர்தல் என அறிவித்தால் கூட அதனை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது என கூறினார்.

சட்டமன்ற தேர்தலோடு மித்னாப்பூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இந்திரஜித் குப்தா மறைந்ததை அடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+