எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு 3 தொகுதிகள்: கருணாநிதி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. அவர்கள்கேட்ட தொகுதியைக் கொடுக்க முடியாது என்று திமுக தரப்பு கூறி விட்டது. இதனால் கட்சி பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு மிகுந்த அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில், மதிமுக வெளியேற்றத்தையடுத்து எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு மவுசு கூடியது. அவர்கள் கேட்கும் 3தொகுதிகளைத் தருவதாக திமுக தரப்பு பச்சைக் கொடி காட்டியது. மதிமுக பின்னால், திருநாவுக்கரசு போய் விடக்கூடாது என்ற பயத்தால் உடனடியாக அவரது கோரிக்கைக்கு திமுக தலையாட்டியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டியில்,அறந்தாங்கி, நாகர்கோவில், திருவாடானை ஆகிய தொகுதிகளில் எம்.ஜி.ஆர். அதிமுக போட்டியிடும்.
15 ஆண்டு காலமாக எனது நண்பராகவும், எனது விருப்பத்திற்கேற்ப சபாநாயகராகவும் இருந்த தமிழ்க்குடிமகன்அதிமுகவில் சேர்ந்துள்ளது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை.
திமுகவிலிருந்து யார் விலகி அதிமுகவிற்குச் சென்றாலும் அவர்களைக் கொண்டு, ஸ்டாலினைமையப்படுத்துவதாக அறிக்கை விடச் சொல்வது ஜெயலலிதாவின் வழக்கம் என்றார் கருணாநிதி.
திமுக கூட்டணியில் திமுக, பா.ஜ.க. தவிர பிற கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளாக உள்ளதே என்ற கேள்விக்கு,நீங்கள் பெரிய பத்திரிகை செய்தியாளரா, அல்லது சிறிய பத்திரிகை செய்தியாளரா என்று கேட்ட கருணாநிதி,எப்படி எல்லா செய்தியாளர்களையும் சமமாக அமர வைத்து கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேனோ அதுபோலத்தான் அனைத்துக் கட்சிகளையும் பாவிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications