ஷார்ஜாவில் விஷவாயு தாக்கி 3 இந்தியர்கள் பலி
துபாய்:
ஷார்ஜாவில் விஷவாயு தாக்கி 3 இந்தியர்கள் இறந்தனர்.
இது குறித்து பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கழிவு நீர் தொட்டியிலிருந்து துர் நாற்றம் வந்து கொண்டிருந்ததால் அங்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என்றுபார்ப்பதற்காக 4 இந்திய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
முதல் பணியாளர் தொட்டியில் இறங்கியதும் கார்பன் மோனாக்சைடு மற்றும் பல விஷவாயு தாக்கியதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு உதவி கேட்டு குரல் எழுப்பினார். இரண்டாவது ஊழியர் அவருக்கு உதவி செய்ய தொட்டிக்குள்இறங்கினார். அவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இறந்தனர்.
இவர்கள் இருவருக்கும் என்ன நேர்ந்தது என அறிய மூன்றாவது ஊழியர் கழிவு நீர் தொட்டியில் இறங்கினார்.அவரும் விஷவாயு தாக்கி இறந்தார்.
இவர்கள் மூவருக்கும் என்ன ஆனது என தெரியாத 4வது ஊழியர் அதிகாரிகளிடம் புகார் செய்து அவர்களைஉதவிக்கு அழைத்து வந்தார். அவர்கள் 3 பேரும் இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.
இறந்து போன மூவரும் யார் என இதுவரை அடையாளம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.